×

இரும்பு கம்பி திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி

தண்டையார்பேட்டை, ஜன.13: தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர், நீண்ட இரும்பு கம்பியை தூக்கி சென்றபோது, அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே பலியானார். தகவலறிந்த தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர், அதே பகுதியில் உள்ள நடைபாதையில் வசித்து வந்த விக்கி (21) என்பதும், பிளாஸ்டிக், இருப்பு கழிவுகளை சேகரித்து கடையில் போட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் சாப்பிட்டு வந்ததும், இவர், அதே பகுதியில் இருந்து இரும்பு கம்பியை திருடி எடுத்துச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பலியானதும் தெரியவந்தது.

The post இரும்பு கம்பி திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Thiruvottiyur Highway Junction ,Vaidyanathan Street, Thandaiyarpet ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...